Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இழுபறி இல்லாம ஒரே ட்ரிப்ல முடிக்கணும்! – அதிமுக – தேமுதிக இன்று மாலை சந்திப்பு!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (11:42 IST)
அதிமுக – தேமுதிக கூட்டணி அமைப்பதில் சிக்கல்கள் நீடித்து வரும் நிலையில் இன்று மாலை இரண்டு கட்சி நிர்வாகிகளும் சந்தித்து பேச உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசாமல் இருந்து வந்த அதிமுக இன்று அமைச்சர் தங்கமணி தலைமையில் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட இருந்தது.

இந்நிலையில் அதிமுகவில் தேமுதிகவுக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என கருதிய தேமுதிகவினர் அமைச்சர் தங்கமணியுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை தவிர்த்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தேமுதிக விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியுள்ள நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.

இன்று மாலை அதிமுக – தேமுதிக நிர்வாகிகள் சந்தித்துக் கொள்ள உள்ள நிலையில் அமைச்சர் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோருடன் தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ளதால் கூட்டணி மற்றும் தொகுதி ஒதுக்கீடுகளை அதிமுக நேர்காணலுக்கு முன்னதாக முடிக்க அதிமுகவினர் தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாராய அமைச்சரை உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்திருக்கிறது.. அண்ணாமலை எக்ஸ் பதிவு..!

ஆர்.எஸ்.எஸ். கையில் கல்வி இருந்தால் நாடு அழிந்துவிடும்: ராகுல் காந்தி ஆவேசம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. இறக்குமதியாளர்களுக்கு லாபம்..!

செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? 10 நாட்களில் பதிலளிக்க கெடு..!

வீடு முழுக்க மலம், சாக்கடை..! போலீஸும் இதற்கு உடந்தை!? - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments