Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

Advertiesment
Aadhav arjuna

Prasanth Karthick

, ஞாயிறு, 1 ஜூன் 2025 (16:08 IST)

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக சார்பில் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழா ஏற்பாடுகளை ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, பிற கட்சி பிரமுகர்கள் குறித்து புஸ்ஸி ஆனந்திடம், ஆதவ் அர்ஜூனா பேசிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஆதவ் அர்ஜுனா “அனைவருக்கும் வணக்கம்,

 

எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று  பொதுவெளியில் வெளியானது. ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு  தெரியும்.

 

என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது. 

 

உண்மையும், நேர்மையும் கொண்ட  ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 

ஜனநாயகப்பூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே  நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு… நன்றி!” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!