Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக நலத்திட்டங்களுக்கு ரூ.845 கோடி கூடுதலாகச் செலவாகும்- அமைச்சர் தங்கம் தென்னரசு

Webdunia
சனி, 22 ஜூலை 2023 (13:58 IST)
தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் மூலமாகப் பயனடைகின்றனர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆட்சியில் பல மக்கள் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ‘’இன்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதியோர் ஓய்வூதியம் ரூ.1000 ல் இருந்து ரூ1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கைம்பெண்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1000 ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.

மேலும்,  ‘’தமிழ்நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் சமூக நல பாதுகாப்பு திட்டங்கள் மூலமாகப் பயனடைகின்றனர். ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து, காத்திருப்பவர்களுக்கு விரைவில் ஓய்வூதிய நடவடிக்கை எடுக்கப்படும்… சமூக நலத் திட்டங்களுக்கு ரூ.845 கோடி கூடுதலாகச் செலவாகும் என்றும்,  வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து முதியோருக்கான உதவித்தொகை உயர்த்தியது நடைமுறைக்கு வரும்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments