Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கணவரிடம் ரூ.2.50 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு நடிகை ரம்பா மனு

கணவரிடம் ரூ.2.50 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு நடிகை ரம்பா மனு

Advertiesment
கணவரிடம் ரூ.2.50 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு நடிகை ரம்பா மனு
, வியாழன், 27 அக்டோபர் 2016 (17:32 IST)
மாத செலவுக்கு ரூ.2.50 லட்சம் ஜீவனாம்சமாக தன்னுடைய கணவன் தரவேண்டும் என்று நடிகை ரம்பா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.


 

 
நடிகை ரம்பா தனது கணவரிடமிருந்து விவகாரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக சமீபத்தில் செய்தி பரவியது. ஆனால், பிரிந்திருக்கும் தனது கணவருடன் சேர்த்து வைக்க கோரித்தான் அவர் மனு செய்தார் என்று அன்று மாலையே செய்தி வெளியானது. 
 
இந்நிலையில், தனக்கும், தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கும் செலவுக்காக மாதம் ரூ.2.50 லட்சத்தை, தனது கணவர் ஜீவனாம்சமாக தர வேண்டும் என உத்தரவிடக் கோரி, மற்றொரு மனுவை ரம்பா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
 
அந்த மனுவில் ‘நான் தற்போது நடிப்பதை நிறுத்தி விட்டேன். எனவே, எனது 2 குழந்தைகளுக்கான படிப்பு மற்றும் மருத்துவ செலவிற்காக என்னுடைய கணவர் மாதம் தோறும் ரூ.2.50 லட்சத்தை தர உத்தரவிட வேண்டும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த மனு, வருகிற டிசம்பர் 3ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜியோவுடன் இணையும் ஐபோன்