நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

Siva
ஞாயிறு, 17 நவம்பர் 2024 (15:49 IST)
நடிகை கஸ்தூரி சற்றுமுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் நடந்த இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் நடிகை கஸ்தூரி மீது நான்கு பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தலைமறைவானதாகவும் இதையடுத்து அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், ஐதராபாத்தில் நேற்று நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இன்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அதன் பின் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதையடுத்து நீதிபதி நவம்பர் 29ஆம் தேதி வரை நடிகை கஸ்தூரியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டு உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

SIR-க்கு எதிரான அனைத்துக்கட்சி கூட்டம்: தவெக புறக்கணிக்க முடிவா?

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments