Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கியிருக்கின்றாரா கஸ்தூரி? தனிப்படை விரைவு..!

Mahendran
சனி, 16 நவம்பர் 2024 (11:28 IST)
நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை பிடிக்க தனிப்படை போலீசார் ஹைதராபாத் விரைந்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கஸ்தூரி கடந்த சில நாட்களுக்கு முன்னால் சென்னையில் நடந்த இந்து மக்கள் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில், அந்த கூட்டத்தில் அவர் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தன்னை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று முன் ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.

அதனை அடுத்து கஸ்தூரியை கைது செய்ய போலீசார் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் உள்ள தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், தனிப்படை போலீசார் ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளனர். பரவாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அவர் கைது செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments