Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகை திவ்யா உன்னி விவாகரத்து: பரபரப்பு காரணங்கள்

நடிகை திவ்யா உன்னி விவாகரத்து: பரபரப்பு காரணங்கள்
, வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (12:29 IST)
கண்ணன் வருவான் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை திவ்யா உன்னி. கேரளாவைச் சேர்ந்த இவர் தொடர்ந்து வேதம், சபாஷ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் கடந்த 2002ம் ஆண்டு டாக்டர் சுதீர் சேகரன் என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் நடிப்புக்கு முழுக்கு போட்ட அவர் அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.


 

இந்நிலையில் திவ்யா உன்னி அவரது கணவரை பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. தனது குழந்தைகளை  அழைத்துகொண்டு கொச்சியில் தற்போது உள்ளார்.14 ஆண்டுகள் நன்றாக சென்ற அவர்களது வாழ்க்கையில் பிரிவிற்கு காரணம் என்ன என்பது பலரின் கேள்வியாக உள்ளது.

திவ்யா உன்னி முறைப்படி பரதம், மோகினியாட்டம், குச்சிப்புடி கற்றவர். நாட்டியத்திலும் அதிக ஈடுபாடு உள்ளவர். திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் டெக்சாஸ்,ஹூஸ்டன் ஆகிய நகரங்களில் நடனப்பள்ளிகளை நடத்திவந்தார்.

தொடர்ந்து நடனப்பள்ளிகளின் மீதே அதிக ஆர்வம் கொண்ட திவ்யாவின் நடவடிக்கைகள் மீது கணவருக்கு கோபம் வந்தது. நடனப்பள்ளிகளை விட்டு குடும்பத்தை மட்டும் பார்த்துகொண்டால் போதும் என கணவர் வற்புறுத்திவந்தார். இதனால் மன கசப்பு ஏற்பட்ட அவர் தனது கணவரிடமிருந்து விவாக்ரத்து வேண்டி விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ருதிக்கும் கவுதமிக்கும் இடையில் வெடிக்கும் பிரச்சனை