Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று விசாரணைக்கு வருகிறதா விஜய் மேல் முறையிட்டு மனு ??

இன்று விசாரணைக்கு வருகிறதா விஜய் மேல் முறையிட்டு மனு ??
, திங்கள், 19 ஜூலை 2021 (09:41 IST)
நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல் முறையிட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
வரி கட்டும் விவகாரம் தொடர்பாக விஜய் தரப்பு மேல் முறையீடு செய்தது. இது குறித்து விஜய்யின் வழக்கரிஞர் வரி கட்ட கூடாது என்ற நோக்கம் இந்த வழக்கில் துளியும் இல்லை. வரிவிதிப்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அரசின் அணுகுமுறையும் முரண்பட்ட இருந்ததால் இந்த வழக்கு தொடரப்பட்டது. அப்போதே நுழைவு வரி கட்டித்தான் ஆகவேண்டும் என்று உத்தரவு இருந்திருந்தால் எந்த ஆட்சேபனையும் இன்றி விஜய் அவர்கள் வரி கட்டி இருப்பார். 
 
சமூகத்தில் தனக்குரிய செல்வாக்கை பயன்படுத்தி வரி விதிப்பில் இருந்து யாரும் விலகி ஓட வெளியேற முடியாது, அது விஜய் அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் இப்போது நீதிபதி ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை தெரிவித்து அபராதம் விதித்துள்ளார். தீர்ப்பில் எங்களுக்கு இருக்கும் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறோம் என தெரிவித்தார். 
 
இந்நிலையில் சொகுசு கார் வழக்கில் விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் விமர்சனங்களை நீக்கக்கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல் முறையிட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

38 ஆயிரமாக குறைந்துள்ள தினசரி கொரோனா பாதிப்புகள்! - இந்திய நிலவரம்!