Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஜய், நடிகை நயன்தாரா ஓபிஎஸுக்கு ஆதரவு?: போலீஸ் புகாரால் பரபரப்பு!

நடிகர் விஜய், நடிகை நயன்தாரா ஓபிஎஸுக்கு ஆதரவு?: போலீஸ் புகாரால் பரபரப்பு!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2017 (15:48 IST)
ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைபட்டு நிற்கிறது. இதனை சுற்றியே தமிழக அரசியல் களம் சுழன்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இரு தரப்பினரும் தங்கள் ஆதரவு வட்டத்தை பெரிதாக்கி மக்கள் ஆதரவை பெற முயற்சி செய்து வருகிறது.


 
 
சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கிய போது அதிமுகவில் உள்ள சில நடிகர்கள், மற்ற சில இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோர் ஓபிஎஸுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் சமீபத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகள் ஓபிஎஸுக்கு ஆதரவு வழங்கியதாக வதந்தி பரவியது.
 
நடிகர் கமல் ஓபிஎஸுக்கு ஆதரவு தெரிவித்ததாக தகவல் வெளியானது. பின்னர் நடிகர் விஜயும் ஓபிஎஸுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும், அந்த பட்டியலில் நடிகை நயன்தாரா, திரிஷாவும் உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது.
 
இந்நிலையில் அந்த நடிகர், நடிகைகள் யாரும் தங்கள் ஆதரவை யாருக்கும் தெரிவிக்கவில்லை எனவும் இது வதந்தி எனவும் தெரியவந்துள்ளது. சிலர் போலியாக அந்த நடிகர், நடிகைகள் பெயரில் சமூக வலைதளங்களில் கணக்குகளை தொடங்கி இப்படி பொய் தகவலை பரப்பியுள்ளனர்.
 
இதனையடுத்து சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் இது தொடர்பாக நடிகைகள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் ஆனால் எந்த நடிகை புகார் கொடுத்தது என்ற விபரம் வெளியாகவில்லை.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments