Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுச்சி லீக்ஸ் ; கைக்குள் ஆபாசம் வந்துவிட்டது ; நடிகை ஊர்வசி காட்டம்

சுச்சி லீக்ஸ் ; கைக்குள் ஆபாசம் வந்துவிட்டது ; நடிகை ஊர்வசி காட்டம்
, புதன், 8 மார்ச் 2017 (09:45 IST)
பின்னணிப் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்திலிருந்து வெளியாகும் ஆபாச புகைப்படங்கள் குறித்து நடிகை ஊர்வசி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் பாடகி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், ஹன்சிகா, த்ரிஷா, சூதுகவ்வும் கதாநாயகி சஞ்சிதா ரெட்டி ஆகியோரின் புகைப்படங்கள் வெளியாகி தமிழ் சினிமா உலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
மேலும், பாடகி சின்மயி, அனிருத், ஆண்டிரியா, பார்வதி நாயர், அமலாபால் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகும் என அந்த டிவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதில்,   அந்த வீடீயோவில் இருப்பது நான் இல்லை என சஞ்சிதா ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார். அதேபோல், பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில் சுசித்ராவின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது. ஆனால், சுச்சிலீக்ஸ் என்கிற ஹேஸ்டேக்கில் இருந்து நடிகைகள் என்ற பெயரில் பல ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ஊர்வசி “பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை அனைத்திற்கும், செல்போனே காரணம். தற்போதுள்ள விஞ்ஞான வளர்ச்சியால், ஒவ்வொருவரின் கையிலும் ஆபாச படங்கள் இருக்கிறது. இதனால் ஏற்படும் உடல் பசியை தணித்துக் கொள்ள குழந்தை, மூதாட்ட என பாலியல் பலாதகாரங்கள் அதிகரித்து வருகிறது. எனவே, இணையதளங்களில் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை தடுக்க வேண்டும். அது சாத்தியமில்லை எனில், பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உண்ணாவிரதப் போராட்டம் ; தடைகளை தாண்டி சாதிக்குமா ஓ.பி.எஸ் அணி?