Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உண்ணாவிரதப் போராட்டம் ; தடைகளை தாண்டி சாதிக்குமா ஓ.பி.எஸ் அணி?

உண்ணாவிரதப் போராட்டம் ; தடைகளை தாண்டி சாதிக்குமா ஓ.பி.எஸ் அணி?
, புதன், 8 மார்ச் 2017 (09:05 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் எனற கோரிக்கையை முன் வைத்து ஓ.பி.எஸ் அணி இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கிறது.


 

 
ஜெ.வின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் ஓ.பி.எஸ் அணி எழுப்பி வருகிறது. அவரின் மரணம் தொடர்பாக சி.பி.ஐ அல்லது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட மொத்தம் 33 இடங்களில் இன்று காலை 9 மணி  முதல் மாலை 5 மணி வரை ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர்.
 
இந்த போராட்டம் நடைபெறும் அனைத்து இடங்களிலும், கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியவறை அதிக அளவில் பங்கேற்க வைக்க ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக வீடுகள் தோறும் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன.
 
ஆனால்  அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் சசிகலா தரப்பு தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. உண்ணாவிரதத்தில் கட்சியினர் பங்கேற்பதை தடுக்கும் படி அனைத்து மாவட்ட செயலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உண்ணாவிரதப் போராட்டத்திற்கு செல்வதை தடுப்பதற்காக, மகளிர் அணி சார்பில் நலத்திட்ட உதவிகள், கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் நடைபெறவுள்ள சில விழாக்களில் இன்று அவர் கலந்து கொள்கிறார்.
 
இவற்றையெல்லாம் முறியடித்து, ஏராளமானோரை உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு பெறச்செய்து வெற்றிகரமாக முடிக்க ஓ.பி.எஸ் அணி முயன்று வருவதாக தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருநாவுக்கரசர் பதவிக்கு ஆபத்தா? புதிய தலைவராக குஷ்புவுக்கு வாய்ப்பு