Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..! சென்னை வெள்ளத்தில் துடுப்பு போடும் மன்சூர் அலிகான்!

Webdunia
வியாழன், 26 நவம்பர் 2020 (14:10 IST)
சென்னையில் பெய்துள்ள கனமழையால் வீதிகளில் தண்ணீர் புகுந்துள்ள நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் துடுப்பு போட்டி பாடி செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

வங்க கடலில் ஏற்பட்ட நிவர் புயலால் சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் அடையாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சில இடங்களில் கரைகள் உடைந்துள்ளன. பல பகுதிகளில் மழைநீர் வெளியேற வசதி இல்லாததால் குடியிருப்புகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் சென்னையில் மழை வெள்ளத்தில் நடிகர் மன்சூர் அலி கான் படகில் செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது. சென்னை வீதிகளில் மழை வெள்ளத்தில் படகில் அமர்ந்து துடுப்பு போட்டு செல்லும் மன்சூர் அலி கான் “எனக்கு ராஜாவா நான் வாழுறேன்” என்றும், “மழையே மழையே தமிழ்நாட்டை விட்டுவிடு” என்றும் பாடிக்கொண்டே செல்வது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments