Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்சியின் பெயரை மாற்றினார் மன்சூர் அலிகான்: புதிய பெயர் என்ன?

Siva
வியாழன், 25 ஜனவரி 2024 (08:00 IST)
நடிகர் மன்சூர் அலிகான் சில ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் இருந்த நிலையில் திடீரென அவர் கட்சியில் இருந்து வெளியேறி தனி அமைப்பை தொடங்கினார். இந்த நிலையில் தன்னுடைய அமைப்பின் பெயரை தற்போது மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான் தமிழ் தேசிய புலிகள் என்ற தன்னுடைய அமைப்பை இந்திய ஜனநாயகப் புலிகள் என பெயர் மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 ஜனவரி 26 ஆம் தேதி காலை 9 மணிக்கு இந்திய ஜனநாயக புலிகள், முன்னர் தமிழ் தேசிய புலிகள் என அறியப்பட்டவை. தங்களது அடையாளம் மற்றும் தீர்மானத்தின் ஒரு கணிசமான மாற்றத்தை பெருமையுடன் அறிவிக்கிறது.

இந்த மாற்றம் ஜாதி வெறியை நீக்கி கல்வி மற்றும் சமத்துவ உரிமைகளை அனைவருக்கும் குறிப்பாக ஏழைகளுக்கு உறுதி செய்வதில் உள்ள அக்கறையை பிரதிபலிக்கிறது.

தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றி காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நமது இயக்கத்தை  விரிவுபடுத்தும் இந்த புதிய பயணத்தின் மூலம் நாம் சமூக நீதியை மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments