Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தரையிறங்கும் அனைத்து விமானங்களிலும் தமிழ் மொழியில் அறிவிப்பு: அமைச்சர் தகவல்

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (16:28 IST)
தமிழகத்திற்கு வரும் விமானங்களில் முதலில் தமிழில் அறிவிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழர்கள் மத்தியில் பல ஆண்டு காலமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முதல் சென்னையில் தரை இறங்கும் அனைத்து விமானங்களிலும் முதல் அறிவிப்பு தமிழ் மொழியில் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தகவல் அளித்துள்ளார் 
 
மத்திய அமைச்சர் ஹர்திப்சிங்கை இன்று சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், இந்த சந்திப்புக்குப் பின்னர் இந்த தகவலை அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சென்னையில் தரை இறங்கும் விமானத்தில் முதலில் ஆங்கிலம், அடுத்ததாக இந்தி அதனை அடுத்துதான் தமிழ் மொழியில் அறிவிப்பு இடம்பெற்று வருவதாக கூறப்பட்டு வந்தது
 
இந்த நிலையில் இதுகுறித்து மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் அவர்களுடன் இன்று அமைச்சர் பாண்டியராஜன் உரையாடினார். இந்த உரையாடலுக்கு பின்னர் பொங்கல் பண்டிகை முதல் சென்னையில் தரையிறங்கும் அனைத்து விமானங்களிலும் முதலில் தமிழில் தான் அறிவிப்பு வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments