Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடம்பாக்கம் மேம்பாலத்தில் நள்ளிரவில் நடந்த விபத்து: ஒருவர் பலி

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (00:55 IST)
சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இன்று நள்ளிரவில் நடந்த விபத்து ஒன்றில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் கோடம்பாக்கம் மேம்பாலத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.



 
 
சற்று முன்னர் கார் ஒன்றை முந்த முயன்ற இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துவிட்டதாகவும், அவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பலியானதாகவும் முதல்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
மேலும் இதே மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது.

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments