Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவெடுத்தால் யாம் முதல்வர்! கமலின் நள்ளிரவு கவிதையால் பரபரப்பு

Webdunia
புதன், 19 ஜூலை 2017 (00:09 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலில் குதிப்பது கிட்டத்தட்ட உறுதி என்பது போல் உள்ளது அவர் சற்று முன் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள கவிதை. 



 
 
குறிப்பாக முடிவெடுத்தால் யாம் முதல்வர் என்ற வரிகள் அவர் முடிவு செய்துவிட்டதையே மறைமுகமாக குறிக்கின்றது. தேவையில்லாமல் கமல் என்னும் சிங்கத்தை சீண்டிவிட்ட அரசியல்வாதிகள் இனி என்ன பாடு படப்போகின்றனர் என்பதை பொதுமக்கள் பார்க்கத்தான் போகின்றனர். அனேகமாக தமிழகத்திற்கு நல்ல காலம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.
 
கமல் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள கவிதை இதுதான்
 
இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை 
துடித்தெழுவோம் மனதளவில் 
உம்போல் யாம் மன்னரில்லை
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடிபணிவோர் அடிமையரோ?
முடிதுறந்தோர் தோற்றவரோ?
 
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முன்னவரே தலைவர்
 
அமையாது அலைபவர்க்கும் 
அமைந்த என் தோழர்க்கும், 
விரைவில் ஒரு விளி கேட்கும். 
கேட்டு  அமைதி காப்பீர். 
உண்மை வெயிலில் காயும் 
நேற்றைய மழைக்காளான்
 
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments