Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொகுசு கார் மோதி 7 பேர் பலி - கோவையில் அதிர்ச்சி

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (11:19 IST)
கோவையில் சொகுசு கார் மோதி 7 பேர் சம்பவ இடத்திலே பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சுந்தராபுரத்தில் அதிவேகமாக வந்த சொகுசு சாலையோரம் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீதும் ஆட்டோ ஒன்றின் மீதும் கடுமையாக மோதியது. இதில் அந்த ஆட்டோ அருகிலிருந்த கரண்ட கம்பத்தின் மீது மோதி முழுவதுமாக நொறுங்கியது.
 
இந்த கோர விபத்தில் ஆட்டோவிலிருந்த 4 பேரும், சாலையோரம் நின்றுகொண்டிருந்த கல்லூரி மாணவிகள் 2பேர் மற்றும் ஒருவர் என 7 பேர் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
 
விபத்தை ஏற்படுத்திய சொகுசு கார் ஓட்டுனரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீஸார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோவை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

சாமிக்கு ஆரத்தி எடுப்பதில் பூசாரிகளுக்குள் சண்டை.. கத்திக்குத்தால் ஒருவர் கொலை..!

கோடையில் மின்வெட்டு வராது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிமொழி..!

தமிழ்நாட்டில் தினமும் 5 கொலைகள்: இது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சணமா? அன்புமணி

தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.. தமிழக அரசின் அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments