Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூர் தொகுதியை விட்டுக்கொடுக்காத துரைமுருகன்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்தும் ஏசி சண்முகம்..!

Siva
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (17:32 IST)
வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் எம்பி ஆக இருக்கும் நிலையில் அவருடைய செயல்பாடு சரியாக இல்லை என்றும் எனவே அவரை வேறு தொகுதிக்கு அனுப்ப வேண்டும் என்றும் கட்சி நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலின் இடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
ஆனால் திமுகவின் மூத்த அமைச்சர் மற்றும் திமுகவின் பொதுச் செயலாளர் என்ற வகையில் துரைமுருகனை அவ்வளவு எளிதில் சமாதானப்படுத்த முடியாது என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே வேலூர் தொகுதியை எப்படியும் அவர் தனது மகனுக்காக திமுக தலைமை இடம் கேட்டு வாங்கி விடுவார் என்றே கூறப்படுகிறது. 
 
இந்த தொகுதியில் அதிமுகவை பொருத்தவரை பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. எனவே பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஏசி சண்முகம் தான் இந்த தொகுதியில் கவனத்திற்கு உரிய வேட்பாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
அதுமட்டுமின்றி ஏசி சண்முகம் தனக்கு மறைமுக ஆதரவு கொடுக்க அதிமுகவின் முக்கிய பிரமுகர் ஒருவரிடம் பேசி வருவதாகவும் அவரும் ஒப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது. எனவே வேலூர் தொகுதியை பொருத்தவரை கதிர் ஆனந்த் மற்றும் ஏசி சண்முகம் ஆகிய இருவருக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என்றும் இதில் ஏசி சண்முகம் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments