Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக கவுன்சிலர்களே ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவா? அப்செட்டில் துரைமுருகன்..!

Siva
ஞாயிறு, 14 ஏப்ரல் 2024 (07:50 IST)
வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் ஆகியவரிடையே கடும் போட்டி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த வாரம் திமுகவுக்கு ஆதரவாக இருந்த களம் இந்த வாரம் பாஜக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதாக உளவுத்துறை ரிப்போர்ட் கூறியிருப்பதால் துரைமுருகன் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

உளவுத்துறை ரிப்போர்ட்டில் திமுக கவுன்சிலர்கள் சிலர் தங்களது சமூக வேட்பாளர் உள்ளதால் ஏசி சண்முகத்திற்கு ஆதரவாக வேலை செய்து வருவதாக அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் இதனால் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் கடும் அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து அவசர கூட்டத்தை அமைச்சர் துரைமுருகன் கூட்டியபோது சில கேள்விகளை கேட்டு அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியதாகவும் இதனால் அந்த தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது

 கடந்த வாரம் வரை திமுகவுக்கு ஆதரவாக இருந்த வேலூர் தொகுதி பிரதமரின் வருகை, ஏசி சண்முகம் தாராள செலவு, திமுக கவுன்சிலர்கள் சிலரின் ஆதரவு உள்பட சில காரணங்களால் தற்போதைய நிலையில் அவர் முந்துவதாக கூறப்படுகிறது. இதனால் வேலூர் தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

ராமேஸ்வரம் பாலம் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments