தினமும் சுமார் 2500 லிட்டர் பால் பாக்கெட்டுகள் திருட்டு....ஆட்சியாளர்கள் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை - டிடிவி. தினகரன்

Webdunia
புதன், 7 ஜூன் 2023 (15:02 IST)
வேலூர் மாவட்டம், சத்துவாச்சேரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில்,   வேன்களில் தினமும் சுமார் 2500 லிட்டர் பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டிருப்பது என்பது ஆவின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

‘’வேலூர் மாவட்டம், சத்துவாச்சேரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பால் நூதன முறையில் திருடப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

கண்காணிப்பு கேமராக்கள், வருகைப் பதிவேடு, ஒப்பந்த வாகனங்கள் பதிவேடு என பல்வேறு கண்காணிப்பு முறைகள் இருந்தபோதிலும் ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு வேன்களில் தினமும் சுமார் 2500 லிட்டர் பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டிருப்பது என்பது ஆவின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் துணையின்றி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

இனி இது போன்ற பால் திருட்டு நடைபெறாதவாறு அனைத்து ஆவின் பண்ணைகளிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவதோடு, பால் ஏற்றிச் செல்லும் ஒப்பந்த வாகனங்களின் வருகைப் பதிவை தணிக்கைக்கு உட்படுத்துவதுடன், இரண்டு ஆண்டுகளாக பல லட்சம் லிட்டர் பால் திருட்டில் ஈடுபட்டோர் மற்றும் அவர்களின் தொடர்புகள் ஆகியவற்றை முழுமையாக கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்லீவ்லெஸ் ஆடையை விமர்சனம் செய்த கடைக்காரர்.. சட்டக்கல்லூரி மாணவி கொடுத்த பதிலடி..!

பகலில் டீக்கடை பிசினஸ்.. இரவில் முகமூடி கொள்ளையர்கள்.. 3 பேர் கைது..!

இந்திய சட்டங்களுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்: எக்ஸ் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவு..!

ரூ.18 லட்சம் கோடி ரூபாய் சொத்து வைத்துள்ள அமேசான்.. ஜெஃப் பெசோஸ் தந்தை எடுத்த அதிரடி முடிவு..!

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments