Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கழிசடைக் கலாச்சாரக் கயவர்கள் மீது குண்டர் சட்டம் ரத்து ...வெட்கக்கேடானது - ஸ்டாலின் தாக்கு

கழிசடைக் கலாச்சாரக் கயவர்கள் மீது குண்டர் சட்டம் ரத்து ...வெட்கக்கேடானது - ஸ்டாலின் தாக்கு
, சனி, 2 நவம்பர் 2019 (14:46 IST)
பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டியது தொடர்பாக வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர்  பார் நாகராஜனை போலிஸார் விடுவித்தனர். 
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, சபரிராஜன் மீது கோவை ஆட்சியர் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவை தற்போது ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 
 
நீதிமன்றத்தின் இந்த முடிவு அனைத்துத்  தரப்பினருக்கும் மிகுந்த அதிர்ச்சி அளித்துள்ளது.
 
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘குண்டர்சட்டத்தில் கைது செய்யும் போது என்னென்ன நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்  என்று ஏற்கனவே நீதிமன்றமும் பல்வேறு தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது.அந்த தீர்ப்புகளை எல்லாம் முற்றிலும் புறக்கணித்து  இந்த வழக்கில் சிக்கியுள்ள முக்கிய குற்றவாளிகளை தப்ப விட வேண்டும் என  உள்நோக்கத்தோடு காவல்துறை செயல்பட்டுள்ளது.
 
இளம்பெண்களின் எதிர்காலத்தைச் சீரழித்த கழிசடைக் கலாச்சாரக் கயவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்பு தயவு தாட்சண்யமின்றி நிறுத்தப்பட்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என  வலியுறித்திக் கேட்டுக்கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

படேல் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் வல்லரசாகிருப்போம்.. மத்திய அமைச்சர் கருத்து