காங்கிரஸ் கட்சியில் சேர அப்துல்கலாம் அண்ணன் மகன் முடிவு

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (07:05 IST)
முன்னாள் இந்திய குடியரசு தலைவரும் மக்களின் ஏகோபித்த அன்பை பெற்றவருமான அப்துல்கலாம் அவர்களின் மூன்றாவது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது.
 
இந்த சில திறப்பு விழாவில் அப்துல்கலாமின் அண்ணன் மகன் ஏ.பி.ஜே.எம்.ஹாஜா செய்யது இப்ராஹிம் கலந்து கொண்டு சிலைக்கு மரியாதை தெரிவித்தார்.
 
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் மூலம் ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தெரிவித்தார்.
 
ஏற்கனவே இவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தவர் என்பதும், அக்கட்சியில்  மாநில மற்றும் அகில இந்திய சிறுபான்மை துறை செயலாளராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments