Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அபராத கட்டண உயர்வை கைவிட வேண்டும்- சிபிஐ(எம்)

K Balakrishnan
, வியாழன், 27 அக்டோபர் 2022 (17:25 IST)
வாகன சட்டத் திருத்தம் மூலம் மிக கடுமையான அபாராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  இந்தக் கட்டண உணர்வை கைவிட வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதிய திருத்தப்பட்ட வாகன சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பொதுமக்கள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வரும் நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தமிழ்நாடு அரசுக்கு இந்த சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,’’ வாகன சட்டத் திருத்தம் மூலம் மிகக் கடுமையான அபராதம்!

அபராத கட்டண உயர்வை கைவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

திருத்தப்பட்ட வாகன சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால்  அனைத்து விதமான விதி மீறல்களுக்கும் அபராதமாக ஏற்கனவே வசூலிக்கப்பட்ட தொகை 400 % முதல் 1900 % வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.’’ என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Ride-ஐ ஓட்டுநர்கள் ரத்து செய்தால் ₹ 500 அபராதம்: தமிழக அரசு அதிரடி