பால் பண்ணையிலிருந்து கொரோனா பரவவில்லை! – ஊழியர் இறப்புக்கு ஆவின் விளக்கம்!

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (11:55 IST)
சென்னையில் ஆவின் பால் பண்ணை ஊழியர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா பால் பண்ணையிலிருந்து பரவவில்லை என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காணப்பட்டாலும் சென்னையில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பண்ணையில் மெஷின் ஆப்பரேட்டராக பணிபுரிபவர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார்.

இதனால் மாதவரம் பால் பண்ணையில் பால் வர்த்தகம் செய்ய முகவர்கள் அஞ்சியதாக தெரிகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாதவரம் ஆவின் பால் பண்ணை நிர்வாகம், இறந்த நபருக்கு பால் பண்ணையில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும், கொரோனா பாதிக்கும் முன்னரே சம்பந்தப்பட்ட நபர் உடல்நலக்குறைவு காரணமாக ஒரு மாதகாலமாக விடுப்பில் இருந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments