Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பால் பண்ணையிலிருந்து கொரோனா பரவவில்லை! – ஊழியர் இறப்புக்கு ஆவின் விளக்கம்!

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (11:55 IST)
சென்னையில் ஆவின் பால் பண்ணை ஊழியர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவருக்கு கொரோனா பால் பண்ணையிலிருந்து பரவவில்லை என ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் காணப்பட்டாலும் சென்னையில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பண்ணையில் மெஷின் ஆப்பரேட்டராக பணிபுரிபவர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார்.

இதனால் மாதவரம் பால் பண்ணையில் பால் வர்த்தகம் செய்ய முகவர்கள் அஞ்சியதாக தெரிகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாதவரம் ஆவின் பால் பண்ணை நிர்வாகம், இறந்த நபருக்கு பால் பண்ணையில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும், கொரோனா பாதிக்கும் முன்னரே சம்பந்தப்பட்ட நபர் உடல்நலக்குறைவு காரணமாக ஒரு மாதகாலமாக விடுப்பில் இருந்ததாகவும் விளக்கம் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments