Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞரிடம் வழிப்பறி செய்த கூகிள்பே கொள்ளையர்கள்! – ஆவடியில் பரபரப்பு!

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (15:00 IST)
சென்னை ஆவடியில் இளைஞர் ஒருவரிடம் மர்ம கும்பல் கூகிள்பே வழியாக கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர் கலைஞர் நகரை சேர்ந்த அஜித்குமார் என்பவர் தனது நண்பரை பார்த்து விட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஆவடி வழியாக வந்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அவரை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் சென்ற நிலையில் அங்கு இருவர் அஜித்தை வழிமறித்துள்ளனர்.

அவர்களோடு லிப்ட் கேட்டு வந்த ஆளும் சேர்ந்து அஜித்தை தாக்கியதோடு அவரிடம் இருந்த தங்க செயினை பறித்துள்ளனர். அவரிடம் பணம் இல்லாததால் அவரை மிரட்டி அவரது போனில் உள்ள கூகிள் பே பாஸ்வெர்டை பெற்று அதிலிருந்த பணத்தை தங்கள் கணக்குக்கு மாற்றிக் கொண்டு இரு சக்கர வாகனத்தையும் பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர்.

இதுகுறித்து அஜித்குமார் அளித்த புகாரின் பேரில் கூகிள் பே கணக்கிலிருந்து எந்த கணக்கிற்கு பணம் சென்றது என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments