Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனா! – ஆரணியில் அதிர்ச்சி!

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (15:58 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளன. டெல்டா மற்றும் ஒமிக்ரான் இரண்டு வகை கொரோனாவும் பரவுவதால் மூன்றாம் அலை பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அரசு பள்ளியில் 2 ஆசிரியர்கள், 18 மாணவியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் நலன் கருதி அனைவருக்கும் ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments