Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் அலுவலகம் மீது கற்கள், பாட்டில் வீச்சு! – சீமானுக்கு எதிராக போராட்டம்!

Webdunia
திங்கள், 6 மார்ச் 2023 (12:46 IST)
அருந்ததியர் சமூக மக்கள் குறித்து சீமான் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில் போரூர் நா.த.க கட்சி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்காக பல கட்சிகளும் போட்டியிட்ட நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அருந்ததியர் மக்கள் குறித்து பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனை தொடர்ந்து சீமானை கண்டித்து பல்வேறு அமைப்புகள் பல பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆனால் இதுகுறித்து பேசிய சீமான் தான் வரலாற்று சம்பவங்களையே சொன்னதாகவும், தான் அருந்ததியர் சமூக மக்களை இழிவுபடுத்தவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று ஆதித்தமிழர் கட்சியினர் சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய அவர்கள் கட்சி அலுவலகம் மீது கற்கள், பாட்டில்களை வீசி தாக்கியதால் பரபரப்பு எழுந்துள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments