Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் ஆசிரியைக்கு வாக்குச்சாவடியில் ஏற்பட்ட விபரீதம்!!!

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (09:07 IST)
சேலத்தில் வாக்குச்சாவடி பயிற்சி முகாமில் மயங்கி விழுந்த ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டம்னற இடைத்தேர்தல் நெருங்க இன்னும் சில நாட்களே உள்ளது. பல்வேறு கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மறுபுறம் தேர்தலை நடத்த அரசு ஊழியர்களுக்கு சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகமெங்கிலும் உள்ள அரசு ஊழியர்கள் தேர்தல் மையங்களில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அப்படி நேற்று சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் தேவனூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த நித்யா என்ற இளம் ஆசிரியை பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.
 
உடனடியாக நித்யா அருகிலிருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments