Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாக்குச்சாவடியை கைப்பற்ற தூண்டும்படி பேசிய அன்புமணி ராமதாஸ் : வலுக்கும் எதிர்ப்புகள்

வாக்குச்சாவடியை கைப்பற்ற தூண்டும்படி பேசிய அன்புமணி ராமதாஸ் : வலுக்கும் எதிர்ப்புகள்
, வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (18:18 IST)
பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் செய்துள்ளது. வக்குச்சாவடியில் நம்ம தான் இருப்போம். அப்புறம் என்ன புரியுதா? என்று தொண்டர்களைப் பார்த்து அன்புமணி ராமதாஸ் மேடையில் இருந்தபடி பேசியுள்ளது பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குச்சாவடியில் நாம் மட்டுமே இருக்கும் போது என்ன நடக்கும் என அன்புமணி பேசியுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
 
வாக்குச்சாவடியை கைப்பற்றத் தூண்டும் வகையில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரையின் போது பேசியுள்ளதாகவும் திமுக குற்றம் சாட்டியுள்ளது.
webdunia
அன்புமணி பரப்புரையின் போது பேசியதாவது:
 
திருபோரூரில் அதிமுக மெகா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதா வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்தார். அப்போது தேர்தலின் போது வாக்குச்சாவடியில் நாம் மட்டுமே இருக்கும் போது என்ன நடக்கும்? என்று பேசினார்.
 
இதுகுறித்து தற்போது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பூத்துல நம்ம தான் இருப்போம் : அப்புறம் என்ன நடக்கும் புரியுதா !! - அன்புமணி ராமதாஸ் சர்ச்சை பேச்சு