Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைன் ரம்மியால் ரூ.1 கோடி இழந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் !

Webdunia
சனி, 17 டிசம்பர் 2022 (16:59 IST)
ராசிபுரம் அருகில் ஆன்லைன் ரம்மி விளையாடி ரூ.1 கோடி இழந்த நபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து வரும் சம்பவம் அதிகரித்து வரும்  நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள புதுப்பாளைய என்ற பகுதியில் வசித்து வருபவர் விஜய்(33). இவர் பிகாம் படித்துள்ள நிலையில்,தன் தந்தையுடன் இணைந்து பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாடி வந்த விஜய், இதில், ரூ. 1 கோடி இழந்துள்ளார்.

பணத்தை இழந்த வேதனையில் இருந்த அவர் தற்கொலைக்கு முயன்று  நேற்று முன் தினம் ஒரு வீடியோவை தன் நண்பர்களுக்கு தன் மரணம் பற்றி அதில் குறிப்பிட்டிருந்தார். அதன்பின்னர், அவரது நண்பர்கள் விரைந்து சென்று அவரை மீட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments