Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளம் பெண் மயக்க ஸ்பிரே அடித்து கடத்தல்....

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (14:52 IST)
சென்னை வேப்பெரியில் தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் இளம் பெண்ணை மயக்க ஸ்பிரே அடித்து ஒரு கும்பல் ஆட்டோவில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேத்துப்பட்டு பகுதியில் வசிக்கும் எமல்டா( 25) என்ற இளம்பெண்  செவந்த்டெ மெட்ரிக் பள்ளியில் கணக்காளராக  பணியாற்றி  வருகிறார்.
 
நேற்று இரவு பணி முடிந்து தன் வீட்டுக்கு செல்ல அவ்வழியே வந்த ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆனால் அதில் அவர் ஏறியதும், ஆட்டோவில் இருந்தவர்கள் அவரது முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து அவரை கடத்தி உள்ளனர்.
 
ஆனால் அந்த ஆட்டோவில் இருந்து எமல்டா  குதித்து தப்பித்துள்ளார். இருந்தாலும் அவரது ஹேண்ட் பேக், மொபைல் போன், ஏடிஎம் கார்ட் அந்த ஆட்டோவில் விழுந்துவிட்டது.
 
இந்நிலையில் தன் கடத்தப்பட்ட சம்பவம் குறித்தும் தன் ஹேண்ட் பேக் உள்ளிட்டவைகளை மீட்டுத்த தரவேண்டுமென வேப்பேரி காவல் நிலையத்தில் எமல்ட்ரா புகார் அளித்துள்ளார். 
 
புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் பள்ளிக்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரித்து வருவதாக தகவல் வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments