இளம் பெண் மயக்க ஸ்பிரே அடித்து கடத்தல்....

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (14:52 IST)
சென்னை வேப்பெரியில் தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் இளம் பெண்ணை மயக்க ஸ்பிரே அடித்து ஒரு கும்பல் ஆட்டோவில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேத்துப்பட்டு பகுதியில் வசிக்கும் எமல்டா( 25) என்ற இளம்பெண்  செவந்த்டெ மெட்ரிக் பள்ளியில் கணக்காளராக  பணியாற்றி  வருகிறார்.
 
நேற்று இரவு பணி முடிந்து தன் வீட்டுக்கு செல்ல அவ்வழியே வந்த ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆனால் அதில் அவர் ஏறியதும், ஆட்டோவில் இருந்தவர்கள் அவரது முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்து அவரை கடத்தி உள்ளனர்.
 
ஆனால் அந்த ஆட்டோவில் இருந்து எமல்டா  குதித்து தப்பித்துள்ளார். இருந்தாலும் அவரது ஹேண்ட் பேக், மொபைல் போன், ஏடிஎம் கார்ட் அந்த ஆட்டோவில் விழுந்துவிட்டது.
 
இந்நிலையில் தன் கடத்தப்பட்ட சம்பவம் குறித்தும் தன் ஹேண்ட் பேக் உள்ளிட்டவைகளை மீட்டுத்த தரவேண்டுமென வேப்பேரி காவல் நிலையத்தில் எமல்ட்ரா புகார் அளித்துள்ளார். 
 
புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் பள்ளிக்கு முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரித்து வருவதாக தகவல் வெளியாகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

தனியார்களை நம்பி, அதுவும் 2 நிறுவனங்களை மட்டும் நம்பினால் இப்படித்தான்.. இண்டிகோ விவகாரம் குறித்து எச்சரிக்கை..!

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும்: இன்று கனமழைகு வாய்ப்பு எங்கே?

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் கோரிக்கை மாநிலங்களவையின் நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments