Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓரினசேர்கைக்கு மறுத்த பெண்ணின் மகனை கொன்ற பெண்

ஓரினசேர்கைக்கு மறுத்த பெண்ணின் மகனை கொன்ற பெண்

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (10:00 IST)
ஓரினசேர்கைக்கு மறுத்த பெண்ணின் மகனை கொன்று ரோஸ்லின் என்ற பெண் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

 
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். செல்போன் கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி லெட்சுமிபிரபா. இவர்களின் மகள் சிதானி (9), மகன் சிரீஸ் (3) இந்த ஆண்டு தான் மழலையர் பள்ளியில் சேர்க்கப்பட்டான். இரு வருடங்களுக்கு முன்பு சிவக்குமார் செல்போன் எண்களுக்கு ரீசார்ஜ் செய்யும் கடை தொடங்கினார். அதை லெட்சுமிபிரபா கவனித்து வந்தார். அந்த கடையில் துரைசாமிபுரத்தை சேர்ந்த ரோஸ்லின் பாக்கியராணி (23) வேலைபார்த்து வந்தார். வேலைக்கு சேர்ந்த் கொஞ்ச நாட்களில், ரோஸ்லின், லெட்சுமிபிரபாவை ஓரினசேர்கைக்கு அழைத்துள்ளார். இதனால் ரோஸ்லினை அவர் வேலையை விட்டு நீக்கினார். 

இந்நிலையில், பாலக்கரை காவல் நிலையத்திற்கு சென்ற ரோஸ்லின், சிறுவன் சிரீசை கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார். ரோஸ்லினிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லெட்சுமிபிரபா வேலையில் இருந்து நீக்கியதால் அவர் மீது ரோஸ்லினுக்கு ஆத்திரம் ஏற்பட்டதும். இதனால் லெட்சுமிபிரபாவை பழிவாங்க அவருடைய மகன் சிரீசை பாழடைந்த ஒரு வீட்டின் அருகே அழைத்து சென்று அவனை துப்பட்டாவால் ரோஸ்லின் கழுத்தை நெரித்து கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ரோஸ்லினை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை மேயர் இந்திராணியின் கணவர்.. கைதான சில நிமிடங்களில் மருத்துவமனையில் அனுமதி..

பொய்யான பாலியல் புகார் கொடுப்பவர் மீது போக்சோ சட்டம் பாயும்: நீதிமன்றம் எச்சரிக்கை..!

வேலை தேடுவதற்காகவே ஒரு அலுவலகம்.. தினமும் ரூ.365 கட்டணம்..!

இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பகவத் கீதையில் முதுகலை படிப்பு.. எதிர்ப்பு கிளம்புமா?

போராட்டம் செய்யும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த ஐகோர்ட் உத்தரவு! பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments