Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலை புறக்கணித்த கிராமம்: ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை!

Webdunia
திங்கள், 16 மே 2016 (12:58 IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 20 வருடங்களாக அடைப்படை வசதிகள் எதுவும் எங்கள் கிராமத்துக்கு செய்து தரப்படவில்லை என மிட்டகண்டிகை கிராமத்தினர் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.


 
 
திருத்தணி அருகே மிட்டகண்டிகை கிராமத்தில் கடந்த 20 வருடங்களாக சாலை, குடிநீர், பேருந்து உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
 
586 வாக்குகளை கொண்ட இந்த கிராமத்தில் வாக்களிப்பதற்கு யாரும் வரவில்லை என்பதை அறிந்து, திருத்தணி வட்டாட்சியர் ஆசீர்வாதம் விரைந்து சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
 
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தால் மட்டுமே, வாக்களிக்கப் போவதாக மிட்டகண்டிகை கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த கிராம மக்கள் வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யததால் தேர்தலை புறக்கணிப்பதாக முன்கூட்டியே அறிவித்ததாக கூறுகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

அரசுப் பள்ளிகளில் 2025- 26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தயாராகும் பெற்றோர்..!

16 மாநிலங்களில் 10 கோடி ஆன்லைன் மோசடி.. டாக்டர் உள்பட 2 பேர் கைது..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments