Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத செந்தில் பாலாஜி சகோதரர்.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (11:05 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய சகோதரர் விசாரணைக்கு ஆஜராக இரண்டு முறை சமன் அனுப்பிய போதிலும் அவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுவதால் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வருமான வரி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் இதுவரை ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. 
 
கடந்த மே மாதம் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்தது என்பதும் இதனை அடுத்து ஜூன் 7ஆம் தேதி நேரடியாக ஆஜராக வேண்டும் என வருமானவரி துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் வருமானவரித்துறை சம்மனுக்கு செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் இதுவரை ஆஜராகவில்லை என்று தகவல் வெளியானதை அடுத்து வருமானவரித்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments