2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத செந்தில் பாலாஜி சகோதரர்.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (11:05 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடைய சகோதரர் விசாரணைக்கு ஆஜராக இரண்டு முறை சமன் அனுப்பிய போதிலும் அவர் ஆஜராகவில்லை என்று கூறப்படுவதால் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வருமான வரி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் இதுவரை ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. 
 
கடந்த மே மாதம் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு உள்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை செய்தது என்பதும் இதனை அடுத்து ஜூன் 7ஆம் தேதி நேரடியாக ஆஜராக வேண்டும் என வருமானவரி துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால் வருமானவரித்துறை சம்மனுக்கு செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் இதுவரை ஆஜராகவில்லை என்று தகவல் வெளியானதை அடுத்து வருமானவரித்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments