Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட மோட்சதீபம்

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (19:59 IST)
காஷ்மீரில் நேற்று முன் தினம் நடந்த பயங்கரவாதிகளில் தாக்குதலுக்கு பலியான இந்திய பாதுகாப்பு படை வீர்ர்களுக்கு இந்திய மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை வீரமரணம் அடைந்த வீரர்களின் ஆன்மா சாந்தியடைய ஜாதி, மத, இன வேறுபாடின்றி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்று வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் இன்று தகனம் செய்யப்பட்டபோது ஒருசிலர் உணர்ச்சிப்பெருக்கால் பாகிஸ்தான் கொடிகளை எரிக்கும் சம்பவங்களும் நடந்தது. அதேபோல் வீர்ர்களின் ஆன்மா சாந்தியடைய பல இடங்களில் பிரார்த்தனை கூட்டங்களும் நடந்து வருகின்றன
 
இந்த நிலையில் ராணுவத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் உள்ள அண்ணாமலையார் சன்னதியில் இன்று மோட்சதீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் ஏற்றுவதால் உயிர்நீத்த ஆன்மாக்கல் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்று ஒரு ஐதீகம்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments