Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாமனாரை அடித்தே கொன்ற புரோட்டா மாஸ்டர்: பதற வைக்கும் காரணம்

மாமனாரை அடித்தே கொன்ற புரோட்டா மாஸ்டர்: பதற வைக்கும் காரணம்
, புதன், 20 மார்ச் 2019 (15:54 IST)
திருச்சியில் சின்ன மாமனாரை மருமகன் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சி மாவட்டத்தில் சின்ன ஆலம்பட்டியை சேர்ந்தவர் முத்து(52). இவருக்கு 4 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். முத்துவின் மகள் கோகிலாவிற்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதனால் கோகிலா தனது தந்தை வீட்டில் வசித்து வந்தார். அவருடன் அவரின் கணவர் சக்திவேலும் மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். கோகிலாவின் கணவர் புரோட்டா மாஸ்டர் ஆவார்.
 
இதற்கிடையே சக்திவேலின் மாமனார் முத்துவிற்கும், அவரின் சகோதரர் ராஜகோபாலிற்கும் ஒரு தேங்காய் மரம் சம்மந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று மீண்டும் இது சம்மந்தமான பிரச்சனை ஏற்பட ஆத்திரமடைந்த சக்திவேல், தனது சின்ன மாமனார் ராஜகோபாலை கல்லால் அடித்து கொலை செய்தார்.
 
இதையடுத்து போலீஸார் ராஜகோபால் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடிக்கடி அடிக்கல் நடுவதால்... சவ்கிதார் போன்று மோடிக்கு புதுப்பெயர் தந்த ஸ்டாலின்!!