Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திர கிரகணம் அன்று சிறுவன் நரபலி?: சாமியார் தலைமறைவு!

சந்திர கிரகணம் அன்று சிறுவன் நரபலி?: சாமியார் தலைமறைவு!

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (13:28 IST)
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சிறுவன் ஒருவன் சந்தேகத்துக்குறிய முறையில் மரணமடைந்துள்ளார். இந்த சிறுவன் சாமியார் ஒருவரால் சந்திரகிரகணம் அன்று நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறது.


 
 
வாணியம்பாடி அருகே உள்ள மேல்நிம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகன். இவரது மனைவியும் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு ஹரிகேஷ் துளசி என்ற மகன் உள்ளார். இவர்கள் வீட்டுக்கு எதிரே ரவி என்ற சாமியார் மடம் ஒன்றை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
 
அந்த மடத்தில் 7 அடி உயரத்தில் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. அதில் ஆமைகளை வளர்த்தும், ரூபாய் நாணயங்களையும் போட்டு வைத்துள்ள்ளார். இவர் ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை, பௌர்ணமி அன்று அந்த சாமியார் மடத்தில் சிறப்பு பூஜைகள் செய்வார். மேலும் உடம்பில் ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாணமாக பூஜை செய்வதாகவும் கூறுகிறார்கள்.
 
இந்நிலையில் முகனும் அவரது மனைவியும் காலை கூலித்தொழிலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் இரவு 7 மாணிக்கு வீட்டுக்கு திரும்பி வரும்போது  மகன் ஹரிகேஷ் துளசி வீட்டில் இல்லை. இதனால் பதறிய அவர்கள் சிறுவனை தேடினர். ஆனால் அவன் கிடைக்கவில்லை.
 
இதனையடுத்து வீட்டுக்கு எதிரே உள்ள சாமியாரின் மடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் சிறுவன் சடலமாக கிடப்பதை பெற்றோர்கள் பார்த்தனர். பின்னர் அங்கு கூடிய ஊர் மக்கள் தண்ணீர் தொட்டியில் இருந்து சிறுவன் ஹரிகேஷ் துளசியை சடலமாக மீட்டனர்.
 
இந்நிலையில் மடத்தின் சாமியால் தலைமறைவாகி உள்ளார். அவரை தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சிறுவனை சாமியார் சந்திர கிரகணம் அன்று நரபலி கொடுத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த சாமியாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments