Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அகர்வால் ஸ்வீட்ஸ் உரிமையாளர் வீட்டில் கொள்ளை: ஹவுஸ்கீப்பர் நேபாளி தலைமறைவு!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (15:13 IST)
சென்னையில் உள்ள பிரபல ஸ்வீட் கடை அகர்வால் ஸ்வீட்ஸ் உரிமையாளர் வீட்டில் பணம் மற்றும் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ள நிலையில் அங்கு வேலை செய்த நேபாளி ஒருவர் தலைமறைவாகியுள்ளார்
 
 சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதிகளில் அகர்வால் ஸ்வீட் கடை உரிமையாளர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நேபாளத்தை சேர்ந்த ராஜன் என்பவரை வேலைக்கு வைத்து இருந்தார். அவருக்கு என தனியாக அறை ஒதுக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ஸ்வீட் கடைக்கு சென்ற உரிமையாளர் அதன் பின் மாலை 5 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பத்து லட்ச ரூபாய் பணம் மற்றும் தங்க நாணயங்கள் தங்க மோதிரம் தங்க செயின்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ந்தார் 
 
இதுகுறித்து காவல்துறை அவர் புகார் அளித்துள்ள நிலையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments