Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் பழனிச்சாமியின் குலதெய்வ கோவிலில் கொள்ளை முயற்சி: பெரும் பரபரப்பு

Webdunia
வியாழன், 4 ஏப்ரல் 2019 (08:52 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் குலதெய்வ கோவில் ஈரோடு அருகே நசியனூரில் உள்ளது. அப்பத்தாள் கோவில் என்று அழைக்கப்படும் இந்த கோவில் அந்த பகுதியில் பெரும் புகழ் பெற்றது
 
இந்த நிலையில் நசியனூர் அப்பத்தா கோவிலில் கடந்த 8 மாதங்களுக்கு முன் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இந்த கோவிலில் இருந்த விலை மதிப்புள்ள நகைகளும் பணமும் கொள்ளை போனது. முதல்வரின் குலதெய்வ கோவிலாக இருந்தும், கொள்ளை நடந்து எட்டு மாதங்கள் ஆகியும் இன்னும் கொள்ளையர் குறித்து ஒரு துப்பும் துலங்காததால் போலீசார் சிக்கலில் உள்ளனர்.
 
இந்த நிலையில் நேற்று மீண்டும் இதே கோவிலில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதால் பெரும் பரபர்ப்பு ஏற்பட்டுள்ளது. நசியனூர் அப்பத்தாள் கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் திடீரென கொள்ளை முயற்சியை கைவிட்டு அவர்கள் மாயமாய் மறைந்துவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கொள்ளை முயற்சி குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments