Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் எதுக்குடா மன்னிப்பு கேட்கணும்? கொந்தளித்த ஆ.ராசா

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (09:27 IST)
சமீபத்தில் திமுக எம்பி ஆ ராசா இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் நான் எதுக்குடா மன்னிப்பு கேட்கணும் என ஆவேசமாக ஆ ராசா பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நேற்று தி நகரில் நடந்த திமுக முப்பெருவிழாவில் பேசிய ஆ ராசா, ‘யார் தப்பு செய்தாலும் மன்னிப்பு கேட்க வேண்டும், நான் மன்னிப்பு கேட்க தயார், ஆனால் நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்?
 
தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி பதவி ஏற்கும்போது என்ன சொல்லி பதவியேற்றார்? அரசியல் சட்டத்தை காப்பாற்றுவேன் என்று கூறினாரே, அதை காப்பாற்றினாரா? அரசியல் சட்டத்தில் சனாதனம் எங்கே இருந்து வந்தது?
 
நான் இந்துக்களுக்கு எதிரி அல்ல இந்து மதத்தின் பெயரால் சொல்லப்படும் சனாதன தத்துவத்துக்கு தான் எதிரி. அந்த சனாதனத்தை வீழ்த்தாதவரை அரசியல் சட்டம் வாழாது என்று அவர் பேசினார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

இன்போசிஸ் பெண் ஊழியரை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்த மர்ம நபர்.. பெங்களூரில் அதிர்ச்சி..!

இன்னொரு அஜித்குமார் சம்பவமா? ஆட்டோ டிரைவரை ரவுண்டு கட்டி அடித்த போலீஸ்.. எஸ்பி எடுத்த நடவடிக்கை..!

காவல்நிலைய மரணங்கள் எல்லா ஆட்சியிலும் இருக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments