Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவில் இருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்: துணை பொதுச்செயலாளர் பதவியும் ராஜினாமா!

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (09:19 IST)
திமுகவில் இருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்: துணை பொதுச்செயலாளர் பதவியும் ராஜினாமா!
முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கிய பிரபலமான சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீரென திமுகவில் இருந்து விலகி இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட சுப்புலட்சுமி தகுதியை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார் 
 
இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக அதிருப்தியில் சுப்புலட்சுமி ஜெகதீசன் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது தோல்விக்கு காரணம் திமுகவினர் தான் என்றும் அவரது தரப்பில் இருந்து கூறப்பட்டதாகவும் இதுகுறித்து அவர் திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் தனது புகார் மீது திமுக தலைமை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த சில நாட்களாக திமுக கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் திடீரென திமுகவில் இருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார். திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு திமுகவில் இருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments