Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் திடீர் சோதனை.. ரூ.1.50 லட்சம் பறிமுதல்..!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (08:15 IST)
திண்டுக்கல் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அதிரடி சோதனை செய்ததில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் பாண்டியன் நகர் என்ற பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பணி செய்யும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென இந்த அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில் அலுவலக கண்காணிப்பாளர் மருதநாயகம் அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

இது குறித்து மேலும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments