நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் திடீர் சோதனை.. ரூ.1.50 லட்சம் பறிமுதல்..!

Webdunia
புதன், 11 அக்டோபர் 2023 (08:15 IST)
திண்டுக்கல் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அதிரடி சோதனை செய்ததில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் பாண்டியன் நகர் என்ற பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் பணி செய்யும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென இந்த அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில் அலுவலக கண்காணிப்பாளர் மருதநாயகம் அவர்களிடம் இருந்து கணக்கில் வராத ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  

இது குறித்து மேலும் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேத்து முளைச்ச காளான்லாம்!.. விஜயை சொல்கிறாரா பிரேமலதா?!...

அட இதுக்கே நாக்கு தள்ளுதப்பா? திரையுலகிலும் தேர்தலை சந்திக்கும் விஜய்..

ஈரானிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய இந்திய நிறுவனத்திற்கு தடை: அமெரிக்கா அதிரடி..!

சென்னையில் நடந்த அமலாக்கத்துறை சோதனை.. கைப்பற்றப்பட்ட பணம், நகை எவ்வளவு?

2 நாட்கள் உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments