Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் 15-ந்தேதி பாஜக போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 8 நவம்பர் 2022 (11:43 IST)
தமிழகம் முழுவதும் வரும் 15ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் பால் விலை ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பால் விலை ஏற்றத்தை கண்டித்து வரும் 15ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபடும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார் 
 
பால் வழங்கும் நிறுவனம் அதன் நிர்வாக சீர்கேட்டினால் நஷ்டத்தில் நடத்தப்படுகிறது என்றும் தவறான நடைமுறையால் ஏற்படும் நஷ்டத்தை மக்கள் தலையில் சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே வீட்டு வரி, சொத்து வரி, மின் கட்டணம், தண்ணீர் வரி, கழிவு நீர் வரி என்று அனைத்து வரிகளும் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது பாலுக்கும் விலையை உயர்த்தியிருப்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும் என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments