Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன் சார்ஜ் போட்டபடியே தூங்கியதால் 90 வயது முதியவர் பலி

Webdunia
ஞாயிறு, 1 ஜூலை 2018 (10:27 IST)
சென்னையில் செல்போன் சார்ஜ் போட்டபடியே தூங்கியதால் 90 வயது முதியவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் அரங்கநாதபுரம் காதர்பாய் பகுதியை சேர்ந்தவர் ஹபிக் முகமது(90). இவர் தனது திருமணமான மகளுடன் வசித்து வந்தார்.
 
இந்நிலையில் ஹபிக் முகமது இரவு வீட்டில் தூங்கும்போது தனது செல்போனில் சார்ஜ் போட்டபடி தூங்கியுள்ளார். எதிர்பாராதவிதமாக திடீரென செல்போன் சார்ஜரிலும், செல்போனிலும் தீ பற்றி எரிந்தது. 
 
இந்த கோர விபத்தில் ஹபிக் முகமதும் அவரது மகளும் படுகாயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுகுறித்து, தாம்பரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போனில் சார்ஜ் போட்டபடி தூங்காதீர்கள் என எவ்வளவு கூறினாலும் இதனை பலர் கேட்காமல் இருப்பதே இதுபோன்ற விபத்திற்கான காரணம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments