Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியை குடிக்க வைத்து கற்பழித்த சக மாணவர்கள்

Webdunia
ஞாயிறு, 1 ஜூலை 2018 (09:58 IST)
ஆந்திராவில் கல்லூரி மாணவியை சக மாணவர்கள் குடிக்க வைத்து கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிரபல பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரின் பிறந்தநாளையொட்டி அவர் சக மாணவ மாணவிகளுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்தார்.
 
பார்ட்டிக்கு வந்த மாணவி சக மாணவர்களின் தொடர் வற்புறுத்தலால் குடித்தார். தன்னிலை மறந்த மாணவியை சீனியர் மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து அந்த மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
 
இது குறித்து மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். கல்லூரி முதல்வர் மாணவர்களை கண்டித்தார். கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால் மாணவி போலிசில் புகார் அளிக்கவில்லை. 
 
இந்நிலையில் சில மாதங்களுக்கு பின்னர், வேறு ஒரு மாணவர் அந்த வீடியோவைக் காட்டி அந்த மாணவியை மிரட்டியுள்ளார். இதையடுத்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே மாணவியை சீரழித்த மாணவர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

தமிழ்நாட்டில் வாக்காளர்களாக மாறும் 6.5 லட்சம் பீகார் மக்கள்.. யாருக்கு வாக்களிப்பார்கள்?

சுதந்திர தினம் உள்பட இந்த மாதம் 15 நாட்கள் வங்கி விடுமுறை.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்