Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவியை குடிக்க வைத்து கற்பழித்த சக மாணவர்கள்

Webdunia
ஞாயிறு, 1 ஜூலை 2018 (09:58 IST)
ஆந்திராவில் கல்லூரி மாணவியை சக மாணவர்கள் குடிக்க வைத்து கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிரபல பொறியியல் கல்லூரி உள்ளது. அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரின் பிறந்தநாளையொட்டி அவர் சக மாணவ மாணவிகளுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்தார்.
 
பார்ட்டிக்கு வந்த மாணவி சக மாணவர்களின் தொடர் வற்புறுத்தலால் குடித்தார். தன்னிலை மறந்த மாணவியை சீனியர் மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து அந்த மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
 
இது குறித்து மாணவி கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். கல்லூரி முதல்வர் மாணவர்களை கண்டித்தார். கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டதால் மாணவி போலிசில் புகார் அளிக்கவில்லை. 
 
இந்நிலையில் சில மாதங்களுக்கு பின்னர், வேறு ஒரு மாணவர் அந்த வீடியோவைக் காட்டி அந்த மாணவியை மிரட்டியுள்ளார். இதையடுத்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த மாணவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஏற்கனவே மாணவியை சீரழித்த மாணவர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்