Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுச்சுவரில் உச்சா போன நாய்: ஓனரை பொளந்தெடுத்த தாத்தா

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (10:47 IST)
தனது வீட்டுச்சுவரில் நாய் சிறுநீர் கழித்ததால் முதியவர் ஒருவர் நாயையும் அதன் ஓனரையும் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் சுகுணா. சுகுணா தான் வளர்க்கும் நாயை வாக்கிங்கிற்கு கூட்டிச் சென்றுள்ளார். அப்போது அவரது நாய் ஸ்ரீதர் என்ற முதியவர் வீட்டுச் சுவரில் சிறுநீர் கழித்ததாக தெரிகிறது.
 
இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் சுகுணாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த ஸ்ரீதர், ஒரு தடியால் சுகுணாவையும் அவரது நாயையும் கடுமையாக தாக்கியுள்ளார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் சுகுணாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
இதுகுறித்து சுகுணா அளித்த புகாரின் பேரில் போலீஸார் முதியவர் ஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்று வெளுத்து கட்டப்போகும் மழை.. சென்னைக்கு எச்சரிக்கை..!

திமுக கொடுத்த வாக்குறுதிகளில் 40 மட்டுமே பரிசீலனையில் உள்ளன: அமைச்சர் தங்கம் தென்னரசு

ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமா? புதிய அதிமுக உதயம்?

டிரம்பிடம் இந்தியாவுக்கு 50% வரி போட சொன்னதே பிரதமர் மோடி தான்: ஆ ராசா

அடுத்த கட்டுரையில்
Show comments