Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் பலி

திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் பலி
, வெள்ளி, 1 ஜூன் 2018 (08:27 IST)
கோவை மாவட்டம் போத்தனூரில் சமையல் எரிவாயு வெடித்து சிதறிய விபத்தில் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார்.
போத்தனூர் பாரதிநகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அமலா(21). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
 
இந்நிலையில் அமலால் சமையல் செய்வதற்காக ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஸ்டவ் வெடித்து சிதறி அமலாவின் உடலில் தீப்பற்றியது. இதனால் அமலா அலறினார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காயமடைந்த அமலாவை  மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த அமலா, சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக இறந்தார். 
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 மாதங்களே ஆன புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் கருத்தை மீடியாக்காரர்கள் திசை திருப்பிவிட்டனர். 'யார் நீங்க' சந்தோஷ் விளக்கம்