Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்க கடலில் உருவாகும் புதிய புயல்! ‘மிதிலி’ என பெயர் வைக்க முடிவு!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (11:10 IST)
வங்க கடலில் உருவாகி வலுவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானால் என்ன பெயர் என அறிவிக்கப்பட்டுள்ளது.



வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.

இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்படி இது புயலாக உருவானால் மாலத்தீவுகள் பரிந்துரைத்த “மிதிலி” என்ற பெயர் புயலுக்கு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக மோக்கா, ஹாமூன் புயல்கள் உருவான நிலையில் இந்த ஆண்டில் உருவாக உள்ள மூன்றாவது புயல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய்.. எங்கே எப்போது?

தமிழக முதல்வர் தாயார் தாயார் தயாளு அம்மாளுக்கு மூச்சு திணறல்.. மருத்துவமனையில் அனுமதி..!

தனிமை சிறையில் இம்ரான் கான்.. மனைவி சந்திக்க கூட அனுமதி மறுப்பு..!

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் இன்று முதல் தாம்பரம் வராது.. என்ன காரணம்?

அடுத்தடுத்து இரு சிறுமிகளை கடித்துக் குதறிய தெரு நாய்கள்.. வந்தவாசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments