பாமகவுக்கு போட்டியாக உருவாகும் 'வன்னியர் சங்கம்'?

Webdunia
புதன், 27 ஜூன் 2018 (22:25 IST)
தமிழக அரசியல் கட்சிகளில் ஒன்றான பாமக, கடந்த பல ஆண்டுகளாக அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு திராவிட கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டது. ஆனால் இந்த கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. 
 
ஒரு குறிப்பிட்ட ஜாதி மற்றும் பகுதிகளில் மட்டுமே இந்த கட்சிக்கு செல்வாக்கு இருப்பதால் இக்கட்சி ஆட்சியை பிடிக்குமா? என்பது பல ஆண்டுகளாக கேள்விக்குறியாக உள்ளது.
 
இந்த நிலையில் சமீபத்தில் பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான காடுவெட்டி குருவின் மறைவு அக்கட்சிக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் தலைமையில் புதியதாக 'வன்னியர் சங்கம்' என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி விரைவில் தொடங்கவிருப்பதாகவும், இக்கட்சியில் தற்போது பாமகவில் இருக்கும் பலர் இணைவார்கள் என்றும் ஒரு வதந்தி மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க வதந்தியா? அல்லது உண்மையா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

குழந்தைகளின் நலனுக்காக சேர்ந்து வாழுங்கள்: பிரிந்து வாழும் தம்பதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments