Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் ரூ.5000 கோடி செலவில் ஈரடக்கு மேம்பாலம்

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (16:24 IST)
சென்னையில் ரூ.5000 கோடி செலவில் ஈரடக்கு மேம்பாலம்
சென்னையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஈரடுக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது 
 
சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே ரூபாய் 5000 கோடி செலவில் ஆறு வழிச்சாலை உடன் ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது. சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் விரைவுச் சாலை அமைக்கும் திட்டத்திற்கு கடந்த 2010ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது
 
2010ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் சுற்றுச்சூழல் விதிகளை காரணம் காட்டி தமிழக அரசால் 2012 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு பறக்கும் சாலை பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது 
 
இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய போது அன்றைய மதிப்பீடு ரூபாய் ஆயிரத்து 815 கோடிதான். முதலில் நான்கு வழி சாலை வழியாக அமைக்க திட்டமிடப்பட்டது. அதன் பின்னர் 4 வழிச்சாலைக்கு பதிலாக 6 வழிச் சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டு திட்ட மதிப்பீடு ரூபாய் 3500 கோடி ஆக உயர்த்தப்பட்டது
 
ரூபாய் 3500 கோடியில் இருந்து தற்போது இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூபாய் 5000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் ரூபாய் 400 முதல் 500 கோடியும், மத்திய அரசு சார்பில் ரூபாய் ஆயிரம் கோடியும் இந்த திட்டத்திற்கு கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முடிந்தால் சென்னை மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments